ஆவின் பால் விலையை உயர்த்த பரிசீலனை: அமைச்சர் தகவல்
கோவை:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ரூ.100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பால்விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என தமிழக பால்வளத் துறை அமைச்சர் சண்முகவேலுதெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊழலற்ற நேர்மையான ஆட்சியை அமைக்கும் நோக்கில் எனக்கும் அமைச்சர் பதவியை அம்மா அளித்துள்ளார்.நான் பதவி ஏற்று 5 நாட்களில் குறைபாடுகளைக் களைய, ஆவின் நிர்வாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனைநடத்தியுள்ளேன். தவறுகள் நடக்கும் இடங்களில் களை எடுப்புகள் நடக்கும்.
இதுவரை பால் கொள்முதல் பட்டுவாடா செய்யப்படாத உற்பத்தியாளர்களுக்கு, 15 நாளில் பட்டுவாடாசெய்யப்படும். தனியார் நிறுவனங்கள் தரமற்ற பாலை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தைத்தடுக்க பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். இந்த நஷ்டத்தை மானியத்தின் மூலம்சரிக்கட்டவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆவின் கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. தணிக்கை செய்ய உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்படும். பால்வளத்துறையில், முறைகேடுகளைக் களைந்து புதிய நிர்வாகத்தை செயல்படுத்தநடவடிக்கை எடுப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications