கனடா இந்தியருக்கு உயரிய விருது
டொரான்டோ:
கனடாவின் உயரிய சிவிலியன் விருதான "ஆர்டர் ஆப் கனடா" என்ற விருதை இந்தியர் ஒருவர் பெற்றுள்ளார்.
ஆப்பிரிக்காவில் பிறந்து, கனடாவில் வாழ்ந்து வரும் இந்தியரான பகதூர் மதானிக்கு ஒட்டாவா கவர்னர் ஜெனரல்ஆட்ரியன் கிளார்க்சன் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
ஏழைகளுக்கு உதவுவதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதற்காக, மதானி இந்த விருதைப் பெற்றார்.
"யுனைட்டட் வே ஆப் கிரேட்டர் டொரான்டோ" என்ற அமைப்பின் முன்னாள் தலைவரான மதானி, தற்போது"ராயல் ஓன்டாரியோ மியூசிய"த்தின் போர்டு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இது தவிர, மேலும் பலதன்னார்வ அமைப்புகளிலும் அவர் உறுப்பினராக இருக்கிறார்.
மதானி தவிர, மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரத்னா கோஷ், புனித போனபீஸ் பொது மருத்துவமனையின்நிரஞ்சனா தல்லா, புனித ஜான் நினைவு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஞ்சித் குமார் சந்திரா ஆகியோரும் இந்தப்பெருமை மிகுந்த விருதைப் பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications