மாறுவேடத்தில் அதிரடிப்படையினர்
சத்தியமங்கலம்:
வீரப்பனைக் கண்காணிக்க மாறு வேடங்களில் போலீசார் காட்டுக்குள் ஊடுறுவுகின்றனர்.
வீரப்பன் வேட்டை விரைவில் தீவிரமடையவுள்ளது. இதனையடுத்து உளவுப் பிரிவு போலீசார் மாறு வேடங்களில்பல இடங்களில் ஊடுறுவி தகவல்களைச் சேகரிக்கவுள்ளனர்.
குறிப்பாக வீரப்பனுக்கு உணவுப் பொருட்கள் சப்ளையாகும் பாதையை அவர்கள் கண்டறியவுள்ளனர். தாளவாடி,கடம்பூர், மசிலியம்தூக்கம், கடம்பூர், பசுவனாபுரம், இகுட்டிபாளையம், அருள்புரம், கெட்டவாடி, சூசைபுரம்போன்ற இடங்களில் உள்ள மளிகைக்கடைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தாளவாடி, பண்ணாரி, கடம்பூர், அந்தியூர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் போலீசார் தீவிரவேட்டையில் ஈடுபடுகின்றனர். வரும் 21 ம்தேதி முதல் இந்த வேட்டை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வீரப்பனின் இருப்பிடம் அறிந்ததும் தேவாரம் அந்தப் பகுதியில் முன்னின்று அதிரடிப்படையைவழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதேசமயம், விரைவில் அவரும் காட்டுக்குள் வந்துதனதுபணியைத் தொடங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications