For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஷாரப் வருகை: போட்டி போடும் நட்சத்திர ஹோட்டல்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உலகப் புகழ்வாய்ந்த காதல் சின்னம் தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகருக்கு வருகை தரவுள்ள முஷாரப்பை தங்கள்ஹோட்டலில் தங்க வைக்க 3 நட்சத்திர ஹோட்டல்கள் போட்டிபோடுகின்றன.

ஆக்ராவில் உள்ள முகுல் ஷெராட்டன், ஓபேராய் அமர் விலாஸ் மற்றும் ஜாய்ஃபி பேலஸ் ஆகிய 3 ஹோட்டல்களின்உரிமையாளர்கள், முஷாரபை தங்க வைக்க அனுமதி கேட்டுள்ளனர்.

இந்த 3 ஹோட்டல்களில் முஷாரப் எந்த ஹோட்டலில் தங்குவார் என்பது இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றுஉத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் அசோக் யாதவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆக்ராவில் தங்கும் முஷாரப் முதலில் தாஜ்மஹாலைத்தான் சென்று பார்ப்பார். பின்னர் முக்கிய அரசியல்பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவார் என்றார்.

ஆக்ராவில் உள்ள முகுல் ஷெராட்டன் ஹோட்டல் மேலாளர் அனுராக் சர்மா கூறுகையில், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்தங்குவதற்கு அனைத்து உயர்ரக வசதிகளும் எங்கள் ஹோட்டலில் உள்ளன.

அவர் அரசு மரியாதையுடன் தங்க வைப்பதற்கான அனைத்து வசதிகளும் எங்கள் ஹோட்டலில் இருக்கின்றன. கடந்த ஆண்டுமார்ச் மாதம் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் இந்திய வருகையின் போது அவரை எங்கள் ஹோட்டலில் தங்க வைக்கஏற்பாடுகள் செய்தோம். ஆனால் அவர் எங்கள் ஹோட்டலில் தங்கவில்லை என்றார்.

இந்த ஹோட்டலில் இரண்டு படுக்கையறை வசதி கொண்ட மெகா சைஸ் அறைகள் முஷாரப்புக்காக அலங்கரிக்கப்பட்டுவைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும் இந்தியாவின் அழியாத சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர அனைத்து அறைகளிலும்தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வசதிகளும் உள்ளன.

இந்த ஹோட்டலில் சுல்தான் புருனே, இசையமைப்பாளர் யானி, குத்துச்சண்டை வீரர் முகமது அலி, இங்கிலாந்து இளவரசர்சார்லஸ், நெல்சன் மண்டேலா, பிரபல நடிகர் பீட்டார் ஓ டோலே மற்றும் மறைந்த ஜோர்டான் பேரரசர் ஆகியோர் தங்கியுள்ளனர்.

அடுத்ததாக சுமார் 175 சதுர கிலோமீட்டரில் தேக்குமர வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் அமர் விலாஸ்பாகிஸ்தான் அதிபர் முஷாரபைத் தங்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இங்கு ஒரு நாள்இரவு தங்குவதற்கு மட்டும் ரூ 75, 000 கட்டணமாகும்.

மேலும் உத்தரப்பிரதேச அரசு செய்திக்குறிப்பில், முஷாரப் தங்கும் ஹோட்டலில் பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்படும். அமெரிக்கமுன்னாள் ஜனாதிபதி கிளின்டன் இந்தியா வந்திருந்த போது எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டதோ அதேபோல் முஷாரப்தங்கவுள்ள ஹோட்டலிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X