For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாவலர்களை திருப்பி அனுப்பினார் ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனக்குப் பாதுகாவலர்கள் யாரும் வேண்டாம் என்று கூறி, தனக்குப் பாதுகாப்புக்காக இருந்த காவலர்களை வெள்ளிக்கிழமைதிருப்பி அனுப்பி விட்டார் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேயர் என்ற முறையில், கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசின் ஆணைப்படி, தனி பாதுகாப்பு அலுவலர் ஒருவர் அடங்கியசிலர் எனக்காக நியமிக்கப் பட்டிருந்தனர்.

நான் சென்னையில் இருந்தாலும், வெளியூர் சென்றாலும் என்னுடன் வந்து, இவர்கள் பாதுகாப்புப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், வரும் சனிக்கிழமை நான் செல்லவிருக்கும் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு, பாதுகாப்பாகச் செல்ல வேண்டாம் என்று தன்மேலதிகாரிகள் கூறியதாக, என்னுடைய பாதுகாப்பு அலுவலர் என்னிடம் தெரிவித்தார். இது, அதிமுக அரசின் ஆணையோஎன்னவோ தெரியவில்லை.

இதுவரை மேயரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு வந்த சென்னை மாமன்றக் காவலர்கள், கடந்த புதன்கிழமை மேயரின்ஆணைக்குக் கட்டுப்பட மறுத்துவிட்டனர். இதுவும் மேலிடத்தின் ஆணைதான் என்பதை நான் அறிவேன்.

அதனால், ஜெயலலிதா ஆட்சியின் இத்தகைய "பெருந்தன்மை"யைப் பாராட்டி, இதுவரை எனக்குப் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்த பாதுகாவலர்களைத் திருப்பி அனுப்பி விட்டேன் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X