திருச்சி அருகே லாரி-வேன் மோதல்: 6 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே லாரியும் வேனும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 6 பேர் பலியானார்கள்.
திருச்சியிலிருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சிநோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரி, இந்த வேனுடன் நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. இதில், வேன்அப்பளமாக நொறுங்கியது.
வேனில் பயணம் செய்த 6 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில், ஆவடி நகர மதிமுக கவுன்சிலர் முத்துவும் ஒருவர்என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications