புலிகள் கண்ணிவெடியில் சிக்கி 6 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை யாழ்ப்பாணம் அருகே மடுவில் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கண்ணிவெடி விபத்தில் 22 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
கண்ணிவெடியில் சிக்கி பஸ் விபத்துக்குள்ளானது குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில்,
திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு புலிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ்வெடித்து சிதறியதில் இவ்விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 22 ராணுவ வீரர்களும் பலாலி ராணுவ மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முகமலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்டு பஸ்சில் திரும்பும் போதுஇவ்விபத்து ஏற்பட்டது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications