For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கையில் கண்ணதாசன் நினைவில்லம் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

காரைக்குடி:

கவிஞர் கண்ணதாசன் நினைவில்லம், அவருடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகேயுள்ளசிறுகூடற்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சொக்கலிங்கம் இந்த நினைவில்லத்தைத் திறந்து வைத்தார்.

கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசனின் மகன் கண்ணப்பன் இந்த நினைவில்லத்தைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்தார்.

கண்ணதாசன் பவள விழாவை முன்னிட்டு, ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட, அவருடைய பிறந்த இல்லம், தற்போதுநினைவில்லமாக மாறியுள்ளது.

இவ்விழாவில், கண்ணதாசனின் திருவுருவச் சிலையை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என். சிதம்பரம், பட்டிமன்றப் புகழ் "திண்டுக்கல்" லியோனி, திரையுலகைச்சேர்ந்த எஸ்.பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம், கண்மணி சுப்பு, கவிஞர் சிவல்புரி சிங்காரம், ஜெயந்தி கண்ணப்பன் உள்படபலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X