ஸ்டாலின் பாதுகாப்பை விலக்கவில்லை: அரசு விளக்கம்
சென்னை:
சென்னை மேயர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு வாபஸ் பெறவில்லை என தமிழக உள்துறைச்செயலாளர் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட போலீசார் தனது விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதாககுற்றம்சாட்டிய சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் அவர்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டிற்கு உள்துறைச் செயவாளர் நரேஷ் குப்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை நகர மேயர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு எதுவும் தேவையில்லை என கூறியிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திவெளிவந்துள்ளது.
ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறபுபிக்கவில்லை. மேயர்ஸ்டாலினுக்கு அளித்து வந்த பாதுகாப்பை ஜுலை மாதம் முதல் மேலும் ஓராண்டுக்கு நீடித்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளது.
ஸ்டாலின் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என கூறினாலோ அல்லது பாதுகாப்பு படையை திரும்ப அனுப்பினாலோ அது அவரதுசொந்த விருப்பம். இதில் மாநில அரசுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.