"வெளிநாட்டு கருத்தடை மருந்துகளுக்குத் தடை வேண்டும்"
கோவை:
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட கருத்தடை மருந்துகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என இந்திய மாதர் தேசியசம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் பணியிடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகமாகி வருகிறது. விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய எந்தவழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இதனை எந்த நிறுவனமும் செயல்படுத்தவில்லை. மேலும் இந்த வழிமுறைகள்குறித்த அறிவிப்பு ஒன்று, அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது. இந்த ஒதுக்கீட்டைக் குறைப்பதால்,அதிகம் பாதிக்கப்படுவர்கள் பெண்கள் தான். வெளிநாடுகளில், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர தடை ஏற்படுத்த வேண்டும்.
அமைப்பு சாரா தொழில்களில், பெண்களுக்கான கூலி ரூ. 110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 70 ரூபாய் மட்டுமேபெண்களுக்கு கிடைத்து வருகிறது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினரால் பலாத்காரம் செய்யப்பட்ட தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த நாகமணி என்ற பெண்ணிற்குஇதுவரை இழப்பீடு கொடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் பெண்ணிற்கு இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கவேண்டும்.
ஆதி திராவிடப் பெண்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும், தொட்டில் குழந்தை திட்டத்தை மீண்டும்அமல்படுத்துவதையும் வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பார்லிமென்டில் மகளிர் மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, வரும் ஜூலை 16ம் தேதி முதல் 23 ம்தேதி வரை போராட்டம் நடத்துவோம்.
ஜூலை 23ம் தேதி சென்னையில் சட்டசபை மற்றும் தமிழக மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications