வந்துவிட்டன மலிவு விலை சீனப் பொருட்கள்
கோவை:
சீனாவிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் சாதனங்கள் கோவை வரவுள்ளன.
இவை மலிவு விலையில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சீனாவிலிருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் மலிவான விலையில் வந்து குவியப் போகின்றன என்ற வதந்தி, கடந்த6 மாத காலமாக தமிழகத்தையே உலுக்கி வந்தது. இப்போது சீனாப் பொருட்கள் வந்துவிட்டதற்கு அறிகுறி தெரியஆரம்பித்துள்ளது
இந்தப் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்வதற்காக, குத்தகைக்கு எடுத்துள்ள கோவையைச் சேர்ந்தடி.ஆர்.எஸ். நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொன்கா என்ற எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சீனத் தயாரிப்புகளை விற்பனை செய்ய, தமிழகத்தின் மொத்தவிநியோகஸ்தராக தேவராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சப் டீலர்களாக 22 பேர் தமிழகம்முழுவதிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொச்சி துறைமுகத்தில் ஒரு கப்பலில் சீனப் பொருட்கள் உள்ளன. அங்கு தொழிலாளர்கள் ஸ்டிரைக்நடப்பதால், அவை அங்கேயே முடங்கியுள்ளன. விரைவில் அவை விற்பனைக்கு வரும். இந்தக் கப்பலில் ரூ.5கோடி மதிப்புள்ள சீனப் பொருட்கள் வந்துள்ளன.
இந்தப் பொருட்களில், சாதாரண கலர் டி.வி. முதல் உயர் தரமான டி.வி. வரை கிடைக்கும். இவற்றின் விலை ரூ.6ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும். மேலும், 100 சிசி திறனுடைய 2 சக்கர வாகனங்கள் ரூ.20ஆயிரத்துக்கும், கம்ப்யூட்டர் மானிட்டர் ரூ.3,750க்கும், முழுக் கம்ப்யூட்டர் ரூ.12 ஆயிரத்துக்கும் கிடைக்கும்.
இது தவிர, ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கார்களும் விற்பனைக்கு வரவுள்ளன. செல்போன் ரூ.2,500க்கும்,பொம்மைகள் மலிவான விலையிலும் கிடைக்கும் என்றார் அவர்.