தமிழக காங்கிரஸ் தலைமை மாறுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள கடுமையான கோஷ்டிப் பூசல் காரணமாக, விரைவில் அக்கட்சியின் தலைவர்இளங்கோவன் மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம்,தற்போதைய எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.பிக்கள் அடைக்கலராஜ், அன்பரசு ஆகியோர்எப்படியாவது இளங்கோவனை மாற்றியே தீரவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

இதற்காக, தங்களுடைய முதற்கட்ட நடவடிக்கையை ஏற்கனவே அவர்கள் துவங்கி விட்டனர். இளங்கோவனின்எதிர்ப்பாளர்கள் என்று கூறப்படும் இவர்கள், திருச்சியில் இவரைத் தூக்குவதற்கான ஆலோசனைக் கூட்டத்தைநடத்தி முடித்துவிட்டனர்.

அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் சென்னையில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அநேகமாகஜூலை 1ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்த 34 ஆண்டுக் காலத்தில் சுமார் 10 தலைவர்களைப்பெற்றுள்ளது, தமிழக காங்கிரஸ் கட்சி. கடந்த ஒரு வருடமாகத் தலைவராக இருந்து வருகிறார் இளங்கோவன்.

ஆனால், கடந்த மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, இளங்கோவனை மாற்றியே தீர வேண்டும் என்றுஒரு கோஷ்டி தலைகீழாக நின்று கொண்டு போராட ஆரம்பித்து விட்டது.

இளங்கோவனை காங்கிரஸ் தலைமையிலிருந்து நீக்க வேண்டும் திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியகையோடு, டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியிடமும் ஒரு மனுவைக் கொடுத்துள்ளது இந்தக் கோஷ்டி.

இதற்கிடையே தமிழக காங்கிரஸும், தமிழ் மாநில காங்கிரஸும் இணையும் வைபவமும் விரைவில் நடைபெறும்என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை த.மா.காவின்தலைவர் மூப்பனார் ஏற்றால் மட்டுமே, அக்கட்சியில் நீடித்துவரும் கோஷ்டிப் பூசல்கள் நீங்கும் என்று சில அரசியல்நோக்கர்கள் கூறுகிறார்கள்.

ஜூலை 15ம் தேதி நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவிற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். அப்போது, த.மா.கா. தலைவர் மூப்பனாரையும் வரவழைத்து,அவரை சோனியாவுடன் பேச வைத்து, இந்த 2 கட்சிகளின் இணைப்பு பற்றி முடிவெடுப்பதற்கு தமிழக காங்கிரஸ்தயாராகி வருகிறது.

ஆனால், தற்போது அமெரிக்காவில் பயணம் செய்துவரும் சோனியா காந்தி, இந்தியா திரும்பிய பிறகுதான் எந்தமுடிவும் தெரிய வரும்.

தன்னுடைய பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியினரைப் பற்றிப் புகார்கூறுவதற்காகவும், சோனியாவின் வருகையை எதிர்பார்த்து, டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+