For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை அருகே யானைகள் அட்டகாசம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை அருகே உள்ள கிராமத்தில் மீண்டும் யானைகள் அட்டகாசம் தொடங்கியுள்ளது. இது குறித்து மலையோரப் பகுதிகளில்வாழும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை அருகே உள்ள ஆனைகட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இதனைவிரட்ட வனத்துறையினர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் உரிய குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் யானைகளுக்கு கிடைத்து வந்தன. இதனால்,கடந்த சில நாட்களாக யானைகள் தொந்தரவு எதுவும் இல்லை.

ஆனால். இப்போது மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் மீண்டும் காட்டிலிருந்து தரைப் பகுதிக்குப் படையெடுக்கத்தொடங்கி விட்டன.

12 யானைகள் மற்றும் 3 குட்டி யானைகள் கொண்ட ஒரு கூட்டம் தரைப்பகுதிக்கு வந்தது. இங்கு விவசாய நிலங்களைத் துவம்சம்செய்து, தண்ணீர் அருந்தி விட்டுச் சென்று விட்டன.

இவற்றை விரட்ட, பொதுமக்கள் ராக்கெட் மற்றும் பட்டாசு ரக வெடிகுண்டுகளை வீசி யானைகளை விரட்ட முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

வீரப்பன் தேடுதல் வேட்டை காட்டுக்குள் நடப்பதால், யானைகளும் இடம் மாறி வந்திருக்கலாம் என வனத் துறையினர் கருத்துதெரிவித்துள்ளனர். இந்தக் காட்டு யானைகள் ஊருக்குள்ளும் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், இது குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X