விம்பிள்டன்: 2வது சுற்றில் லியாண்டர் பயஸ்
லண்டன்:
இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுஇரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
லண்டனில் 11.8 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கொண்ட விம்பிள்டன் டென்னில் போட்டி நடைபெற்றுவருகிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், ஜெர்மனிய வீரர் டேனியல் எல்ஸ்னரை வென்றுஇரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் லியாண்டர் பயஸ்.
ஆட்டத்தின் துவக்கம் முதலே பயஸின் கைதான் ஓங்கியிருந்தது. மூன்றாவது செட்டில் மட்டும் பயஸ் சற்றே பின்தங்கியிருந்தார். ஆனாலும் நான்காவது செட்டில் மீண்டும் வெற்றி பெற்று 6-0, 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில்வென்றார்.
பயஸ் இப்போது பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இப்போதுதான் முதல் முறையாக விம்பிள்டன்போட்டிகளின் முதல் சுற்று போட்டியில் பயஸ் வெற்றி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் ஜோடி சேர்ந்துவிளையாடவுள்ளனர். கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பயஸுடன் அமெரிக்காவின் லிசா ரெமாண்ட் ஜோடிசேர்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications