கதறி அழுத குடும்பத்தினர்
சென்னை:
கருணாநிதி போலீஸாரால் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.
78 வயதான கருணாநிதியை போலீஸார் தரக் குறைவாக இழுத்துச் சென்றதைக் கண்டு பொறுக்காத குடும்பத்தினர்,எவ்வளவோ தடுக்க முயன்றனர். ஆனால், குடும்பத்தினருக்கும் திட்டும் அடியும் விழுந்தது.
தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் அறைக் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்ற போலீஸார், அவரைஅடித்து, இழுத்துக் கொண்டு சென்றபோது, அவருடைய மகள் கனிமொழியும், அவருடைய கணவரும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர்.
"அய்யோ தலைவரைக் கொல்றாங்க... கொலை பண்றாங்க" என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் கத்திக் கதறிக்கொண்டே பின்னாலேயே ஓடினார். ஆனால் போலீஸார் எதையும் கண்டு கொள்ளாமல், கருணாநிதிக் கீழேதள்ளியும், சட்டையைக் கசக்கியும், தூக்காத குறையாக அள்ளிக் கொண்டு சென்றனர்.
மத்திய அமைச்சர் முரசொலி மாறனும், இதையெல்லாம் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரையும்போலீஸார் சும்மா விடவில்லை. நான்கைந்து போலீஸார் சேர்ந்து, அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கினர்.
காலைப் பிடித்துத் தூக்கிய போலீஸை மாறன் கைகளாலேயே அடித்துக் கதறினார். இதனால் மாறன் கடுமையானகாயமடைந்து, தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.