For Daily Alerts
Just In
மாறன் உடல்நிலை பாதிப்பு: அப்பல்லோவில் அனுமதி
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்படுவதைத் தடுக்கச் சென்ற மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்முரசொலி மாறனைப் போலீஸார் அடித்துக் கீழே தள்ளினர்.
இருதய நோயாளியான அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி எறியப்பட்டதையடுத்து அவரது உடல் நிலைமோசமானது.
போலீஸ் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடுத்தியிருந்த வேட்டி அவிழ்ந்து விழுந்தது.
சமீபத்தில்தான் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது போலீஸார் தாக்கியதால் காயமடைந்த அவர் சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பிபி அதிகரித்துள்ளதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]