கருணாநிதி கைதுக்கு மூப்பனார் கண்டனம்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) கட்சித் தலைவர் ஜி.கே. மூப்பனார்கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மூப்பனார் கூறியிருப்பதாவது:
நள்ளிரவுக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த ஒரு முன்னாள் முதல்வரை, கதவை உடைத்துத் தட்டி எழுப்பிக் கைது செய்திருப்பதுகண்டனத்திற்கு உரியது.
அதைவிட, அவரைப் போலீஸார் கைது செய்தவிதம் அதைவிடக் கடும் கண்டனத்திற்குரியது என்று மூப்பனார் கூறியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் ஆட்சியிலுள்ள அதிமுகவின் கூட்டணிக் கட்சியில் த.மா.காவும் அங்கம் வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 3ம் தேதி தன்னுடைய பிறந்தநாள் விழாவின்போது, "சென்ற பிறந்த நாளின் போது வந்த சில காக்கைக் கூட்டங்கள்இந்தப் பிறந்த நாளுக்கு வரவில்லை" என்று கருணாநிதி கூறியிருந்தார். மூப்பனாரைத்தான் "காக்கைக் கூட்டம்" என்று கருணாநிதிகுறிப்பிட்டார் என்று அதற்கப்புறம் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications