கருணாநிதி கைது: டி.வியில் பார்த்த ஆசிரியை சாவு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
திமுக தலைவர் கருணாநிதி, கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட காட்சியைக் கண்ட ஓய்வு பெற்ற ஆசிரியைமாரடைப்பால் இறந்தார்.
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தங்கராஜ். இவரது மனைவி தனம்அம்மாள்(60). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை.
இவர் சனிக்கிழமை காலையில் கருணாநிதி கைது சம்பவத்தை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் வேதனையடைந்தஅவர், மதியம் வரை அழுது கொண்டே இருந்தார். பின்னர், மாலையில் மாரடைப்பால் இறந்து போனார்.
இதே போன்று கோவை அருகே உள்ள காளப்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வரும் ஞானவேல், திடீரெனமாரடைப்பால் பாதிப்படைந்தார். அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.












Click it and Unblock the Notifications