பஸ், ரயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை:
தமிழகத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்படுவதையொட்டி பஸ், ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனதமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் திங்கள்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பின்போது சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் தடுக்கவும்அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும். திறந்திருக்கும் கடைகள், வியாபாரநிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். பஸ், ரயில்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications