இலங்கையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு
கொழும்பு:
இலங்கைத் தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பி, அவருடைய கொடும்பாவியையும் ஞாயிற்றுக்கிழமைஎரித்தனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையிலும் எதிரொலித்துள்ளது. கருணாநிதி அநாகரிகமாகக் கைதுசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட இலங்கைத் தமிழர்கள், கொதித்து எழுந்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள வவுனியாவில், 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாகக் கூடினர்.பின்னர், அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமும்சென்றனர். கருணாநிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோஷங்களும் இவற்றில் அடக்கம்.
பிறகு அனைவரும் சேர்ந்து, ஜெயலலிதாவின் உருவ பொம்மையைக் கொளுத்தி எரித்தனர்.
தற்போது சிறிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ள "டெலோ" என்ற தமிழீழ விடுதலை இயக்கம்தான் இந்தப் போராட்டத்திற்குஅழைப்பு விடுத்திருந்தது.
இந்த "டெலோ" இயக்கத்தினர், முன்பொரு காலத்தில் தீவிரவாதிகளாக இருந்தனர். 1980களில் தமிழ்நாட்டில் கூட தங்களுடையதீவிரவாத முகாம்களை அமைத்திருந்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கருணாநிதிக்காக, தற்போது இவர்கள் குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications