கரூரில் பஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் சாவு
கரூர்:
திங்கள்கிழமை நடந்த பந்த்தின் போது, கரூர் அருகே நடந்த ஒரு கல்வீச்சு சம்பவத்தில் அதிமுக தொண்டர்இறந்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் ரத்தினம் என்ற பொடிமட்டையன் (48). இவர்அதிமுக தொண்டர்.
திங்கள்கிழமை இவர் தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக, கரூர் அரசு மருத்துவமனைக்குபஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
வழியில், கட்டளை என்ற ஊரின் அருகே இந்த பஸ் மீது சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
கல்வீச்சில் உடைந்த பஸ்சின் கண்ணாடி, ரத்தினத்தின் நெற்றியில் குத்தியது. கரூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் காரணமாக, கட்டளையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (46) மற்றும் நெடுஞ்செழியன் (35) ஆகியோர்கைது செய்யப்பட்டனர். இவர்கள் மேல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.