வேடிக்கை பார்க்கும் போலீசின் பாதுகாப்பு வேண்டாம்: கருணாநிதி
சென்னை:
எனக்கு என்ன நடந்தாலும் அதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் போலீசின்பாதுகாப்பு தேவையில்லை என கருணாநிதி கூறியுள்ளார்.
தனக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போலீசஸ் பாதுகாப்பைஉடனடியாகத் திரும்பப் பெறுமாறு அவர் கோரியுள்ளார்.
இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:
எனக்கு மாநில அரசின் சார்பில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார்காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நான் கைது செய்யப்பட்ட போது, போலீசாரால்தாக்கப்பட்டேன். ஆனால் எனக்கு பாதுகாவலாக இருந்த போலீசாரால் என்னைகாப்பாற்ற முடியவில்லை. தாக்குதலை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.
அவர்கள் சும்மா வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த போலீசார் எனக்கு காவலாக இருப்பதால் எந்த விதமான உபயோகமும் இல்லை.எனவே எனக்கு வழங்கப்பட்டிருக்கும் போலீஸ் காவலை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications