கருணாநிதி ஒரு சிறந்த நடிகர் என்கிறார் தம்பிதுரை
டெல்லி:
கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களை வைத்து, கருணாநிதி ஒரு பெரும் நாடகத்தையே நடத்தி, தான் ஒருநல்ல நடிகர் என்று நிரூபித்துள்ளார் கருணாநிதி என்றார் தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரை.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திரை உலகத்தில் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய பல படங்கள் வெற்றிகளைக் குவித்துள்ளன. தற்போதுஅவர் தன்னுடைய வாழ்க்கையிலும் நடிப்பை அரங்கேற்றியுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்காகப் போலீஸார் சென்றபோது, முதலில் நன்றாகத்தான் ஒத்துழைத்தார். இடையில்,உடை மாற்றிக் கொண்டு வருவதற்காகப் போனார் பாருங்கள். அப்போதுதான், அவருடைய அரங்கேற்றம்ஆரம்பமானது.
உடை மாற்றச் சென்ற அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் முரசொலி மாறனுக்கும், திமுகவின் சொந்த டி.வியான சன்டி.விக்கும் செல் மூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நல்ல பிள்ளை மாதிரி வெளியே வந்தார். அதற்குஅப்புறம்தான் அவருடைய உண்மையான நடிப்பே ஆரம்பித்தது.
சிறையில் அவருக்கு உடம்பு சரியில்லை. அவரை இப்படியே சிறையில் கொன்று விடுவார்கள் என்றெல்லாம்கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன? சிறையில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே, பத்திரிகையாளர்கூட்டத்தைக் கூட்டிய கருணாநிதி, ஒரு மணி நேரம் இடைவிடாது பேட்டி கொடுத்துள்ளார். எப்படி?
உடல்நிலை சரியில்லாத ஒருவர் எப்படி தொடர்ந்து ஒரு மணி நேரம் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்என்பதிலிருந்தே அவருடைய நடிப்பை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.
கருணாநிதியைக் கைது செய்ய ஏன் இரவில் சென்றீர்கள் என்று எல்லோருமே கேட்கிறார்கள். இரவிலேயே இப்படிநடிப்பவர், பகலில் எந்த அளவிற்கு நடித்திருப்பார் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஏதோ செய்யப் போய், ஏதேதோ நடந்து விட்டது. இது எங்களுக்குத் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள அடிதான்.திமுகவினரும் ஏதோ பெரிய வெற்றி கிடைத்துவிட்டதாகக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள்மீண்டும் எழுந்திருப்போம் என்று கூறினார் தம்பிதுரை.
ஐ.ஏ.என்.எஸ்.