சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிகிச்சை முடிந்து, திங்கள்கிழமை வீட்டிற்குத் திரும்புகிறார்.
தன்னைக் கைது செய்த போது, போலீஸார் தாக்கியதால், கைகளைத் தூக்க முடியவில்லை என்றும், கழுத்து,தோள்பட்டையில் வலி இருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும், கடந்த ஜூலை 6ம் தேதி அப்போலோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிசியோதெரப்பி சிகிச்சை உள்பட பல மருத்துவச் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. தொடர்ந்து அவரைமருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள்.
தற்போது கருணாநிதி நல்ல குணம் அடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருணாநிதியின் மகன் தமிழரசு ஞாயிற்றுக்கிழமை இரவு அப்போலோ சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தார்.
அப்போது அவரிடம் கருணாநிதியின் டிஸ்சார்ஜ் பற்றிக் கேட்டபோது, "திங்கள்கிழமை காலை அவர்ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்குத் திரும்புவார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications