சிலை: சில விவரங்கள்
ஏசு பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர் எனக் கருதப்படுகிறது.
வள்ளுவரின் திருக்குறள் கிட்டத்தட்ட 60 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு கன்னியாகுமரிக் கடலில் 133 அதிகாரங்களை நினைவு கூறும் வகையில் 133அடியில் சிலை அமைக்கப்பட்டது. கடந்த 1.1.2000ல் இந்த சிலை திறக்கப்பட்டது.
சிலை நிறுவதற்குத் தேவையான பாறைகள் சிறுதாமூர், பட்டுமலைக்குப்பம் மலைகள் மற்றும் அம்பாசமுத்திரம்மலைப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன.
சிலையின் உயரம்: 95 அடி
பீடத்தின் உயரம்: 38 அடி
சிலை மற்றும் பீடத்தின் மொத்த உயரம்: 133 அடி
முகத்தின் உயரம்: 10 அடி
உடலின் உயரம்: 30 அடி
தொடைப் பகுதியின் உயரம்: 30 அடி
கால்களின் உயரம்: 20 அடி
கைகளின் நீளம்: 10 அடி
ஓலைச்சுவடியின் நீளம்: 10 அடி
மார்பின் அகலம்: 30 அடி
தலைமுடி-கொண்டையின் நீளம்: 5 அடி
சிலையின் மொத்த எடை: 7,000 டன்
சிலையை வடிவமைத்தவர்: கணபதி ஸ்தபதி
சிலையை வடித்த சிற்பிகள் மற்றும் பணியாளர்கள் : 500 பேர்
அறத்துப் பாலில் உள்ள 38 அத்தியாயங்களையும், பொருட் பால் மற்றும் காமத்துப் பாலில் உள்ள 95அத்தியாயங்களையும் தான் பீடத்தின் உயரமும் சிலையின் உயரமும் குறிக்கின்றன.












Click it and Unblock the Notifications