பாரிஸை கலக்கிய ஜெகன்னாதர் தேர் திருவிழா

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் சாடிலெட் மாகாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவாகவே மாறிவிட்டிருந்தது.இங்கு நடந்த பூரி ஜெகன்னாதர் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

பந்தல் அமைத்து பஜனை பாடல்கள் ஒரு புறம், மறு புறம் சுடச்சுட இந்திய பலகாரங்கள், மற்றொரு பகுதியில்குஜராத்தின் கைவினை பொருட்கள் என அந்தப் பகுதியே இந்தியா ஆகிப் போயிருந்தது.

ஏறக்குறைய 3,000 பேர் இந்தத் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாமற்றும் மொரீசியஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

தேர்திருவிழா பிரான்சிற்கான இந்திய தூதர் கன்வால் சிபல் தலைமையில் டி லா ரிபப்ளிக் என்ற இடத்தில் இருந்துதுவங்கியது. இந்தத் திருவிழாவில் பிரான்சிற்கான நேபாள தூதர், பிரான்சிற்கான மொரீசியஸ் தூதர் மற்றும்யுனெஸ்கோவிற்கான இந்திய தூதர் நீலம் சபர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்களும் பெண்களும் 20 மீட்டர் நீளம் கொண்ட தேர் வடத்தை பிடித்து தேரை இழுத்து சென்றனர். இந்த தேர்பாரிசின் முக்கிய வீதிகளை எல்லாம் வலம் வந்தது. 6 கிலோமீட்டர் தூரம் வலம் வந்த தேர் பாரிசின் சாட்லெட்லெஸ் ஹாலேஸ் மாவட்டத்தில் வந்து நிலை கொண்டது.

இந்த தேர் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பூரி ஜெகன்நாதர் கோவிலில் இருக்கும் தேரைப் போலவேவடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரிசா ஜகன்நாதர் கோவிலில் கடந்த வாரம்தான் தேர் திருவிழா நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

தேர் வலம் வந்தபோது, தேருக்கு முன் பக்திப் பாடல்களை ஒரு குழு பாடிக் கொண்டு சென்றது. தேரின் மீதுபக்தர்கள் பூக்களை தூவிய வண்ணம் வந்தனர். தேர் ஊர்வலத்துடன் சில பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர். சிலர்குஜாராத்தின் கிராமிய நடனமான கார்பா நடனத்தை நடனமாடியபடி வந்தனர்.

பிரான்சில் உள்ள இஸ்கான் அமைப்பும் இந்த விழாவின் விழாக்குழுவில் அங்கம் வகித்தது. இஸ்கான் அமைப்புபிரான்சில் சில கோவில்களை நிர்மாணித்து, நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்கான் நிர்மாணித்து நடத்தி வரும் கோவில்கள் பாரிசின் முக்கிய பகுதிகளில் உள்ளன. இங்கு இந்துபண்டிகைகைள் எல்லாம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இதனால் இவை இந்து பண்டிகைகள்கொண்டாடப்படும் மையம் போல் திகழ்கின்றன.

தேர் இரவு 7 மணிக்கு நிலைக்கு வந்ததும் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்வழங்கப்பட்டது. சுமார் 5,000 பக்தர்கள் அங்கு குழுமியிருந்தனர்.

தேர் கிளம்பிய போது எதிர்பார்த்ததை விட குறைவான பக்தர்கள்தான் தேரை இழுக்க வந்திருந்தனர். ஆனால் தேர்பல வீதிகளையும் கடந்து வந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி, அவர்களும் தேருடன் வரத் தொடங்கினர்.

நாடு கடந்து வாழும் இந்தியர்களும் ஒரு நாஸ்டால்ஜிக் டச் கொடுத்தது இந்த விழா.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+