லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை முடிந்தது... ஸ்டாலின் மீண்டும் கைதாவாரா?
சென்னை:
ஸ்டாலின் மேயராக இருக்கும் சென்னை மாநகராட்சியில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்சஒழிப்புத் துறையின் முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக விரைவில் ஸ்டாலின்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பல திட்டங்களில் பெரும் அளவில் முறைகேடுகளும் ஊழல்களும்நடந்துள்ளதாக மாநகராட்சி எதிர்க் கட்சிகளான அதிமுகவும் தமிழ் மாநில காங்கிரசும் புகார் கூறி வந்தன.
மாநகராட்சின் எதிர்க் கட்சித் தலைவர் வெற்றிவேல், அதிமுகவின் அவைத் தலைவர் கராத்தே தியாகராஜன்ஆகியோர் இது தொடர்பாக அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியையும் முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துபுகார் மனு கொடுத்தனர்.
இந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா இது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாநகராட்சியின் திட்டங்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஸ்டாலின் மீதான புகார் பட்டியல்:
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஸ்டாலின் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் விவரம்:
சென்னையில் திமுக ஆட்சி காலத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட 10 மேம்பாலங்களில் பல கோடி ஊழல்நடந்துள்ளது.
சென்னை முழுவதும் குடிநீர்க் குழாய்களை சரி செய்வதாகக் கூறி சாலைகளைத் தோண்டவும் அதை மூடவும்செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ள செலவில் முறைகேடு நடந்துள்ளது. இதில் மட்டும் 150 கோடி அளவுக்குஊழல் நடந்துள்ளது.
நேப்பியர் பாலத்தை சரி செய்வதாகக் கூறி செய்த செலவில் ரூ. 40 லட்சம் ஊழல் நடந்துள்ளது.
பிராட்வேயில் வெளிமாநில பஸ்கள் நிறுத்தம் கட்டுவதில் மாபெரும் அளவில் ஊழல். இது போன்ற பல புகார்கள்கூறப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வழக்குகளைப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணையை மிக வேகமாக நடந்திவந்தனர். இப்போது முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இன்னொரு கைதுப் படலம் துவங்கலாம்.












Click it and Unblock the Notifications