Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிபதி அசோக் குமாரின் விசாரணையை முடக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு, கைது செய்யப்பட்ட விதம், பின்னர் போலீசார் நடந்து கொண்டவிதம்ஆகியவை குறித்து தமிழக அரசை கேள்விகளால் குடைந்த நீதிபதி அசோக் குமார் மீதே ஒரு வழக்கு போட்டுள்ளதுதமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.

இது தவிர அதிமுக வழக்கறிஞர் ஒருவரும் நீதிபதிக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவரது மனுஇன்னும் ஏற்கப்படவில்லை. இந்த மனு ஏற்கப்படவும் மாட்டாது எனத் தெரிகிறது. செசன்ஸ் கோர்ட் நீதிபதியானஅசோக் குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியை இவரது வீட்டில் தான் நள்ளிரவில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளியது போலீஸ். அப்போதுகருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதை போலீஸ் புறக்கணித்தது. அதேபோல ஸ்டாலினை சென்னை சிறையில் வைக்க உத்தரவிட்டார். அதையும் போலீஸ் புறக்கணித்தது.

பின்னர் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோது போலீசாரையும் தமிழக அரசையும்ஒரு வாங்கு வாங்கினார் அசோக் குமார். இந்த வழக்கே ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறிய அவர்போலீசாரின் நடவடிக்கைள் மிகத் தவறானவை என்றார்.

அந் நிலையில் அவரது வீட்டுக்கு கொலை மிரட்டல்கள் வரவே பாதுகாப்பு கேட்டு ஆளுனருக்கு மனு அனுப்பினார்நீதிபதியின் மகன்.

இந் நிலையில் தான் சி.பி.சி.ஐ.டி. (கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த பிரிவினர்) போலீஸ் சார்பிலும் அதிமுகவழக்கறிஞர் கந்தசாமி என்பவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள விவரம்:

நீதிபதி அசோக் குமாார் தனது வரம்பையும் மீறி போலீசார் மீதும் அரசு மீதும் கண்டனம் தெரிவித்துள்ளார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யலாமா அல்லது காவலில் வைக்கலாமா என்று மட்டும் தான்நீதிபதி முடிவு செய்யலாம். அதை விட்டுவிட்டு வழக்கின் தகுதி குறித்தே அவர் விவாதிக்க வேண்டிய அவசியம்இல்லை.

இந்த வழக்கில் புகார் கொடுத்த மாநகராட்சி அதிகாரியையும் விசாரணை செய்து வரும் போலீஸ் அதிகாரியையும்நீதிபதி விசாரித்தது தேவையில்லாதது. இதற்காக நீதிபதி தவறான, சட்ட விரோதமான முறைகளைக்கையாண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது அரசுத் தரப்புக்கு நீதிபதி உரிய கால அவகாசம்தரவில்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள (கருணாநிதி, ஸ்டாலின் உள்பட) இந்த மேம்பால ஊழலால் பெற்றலாபம் என்ன என்பது குறித்தும் நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். இது தேவையில்லாதது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளது தவறு.

எனவே இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக வழக்கறிஞர் வழக்கு:

கிட்டத்தட்ட இதே போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி நீதிபதி அசோக் குமார் மீது அதிமுக வழக்கறிஞர் கந்தசாமிஎன்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், இந்த மனு இன்னும் ஏற்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+