மத்திய அரசை அவமதிக்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
என்னைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என முதல்வர் ஜெயலலிதா கூறுவதன் மூலம் மத்தியஅரசை அவர் அலட்சியப்படுத்துகிறார் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது:
போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் மத்திய அரசின் உத்தரவை ஜெயலலிதாகேவலப்படுத்தி வருகிறார்.
நான் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ராமன் கமிஷன் விசாரணையை ஏற்க முடியாது.எப்படி விசாரிக்க வேண்டும், எந்த மாதிரி விசாரணை அறிக்கையை தயார் செய்து தர வேண்டும் என்று அவருக்குஜெயலலிதா அரசு ஏற்கனவே கூறிவிட்டது.
இதில் நீதிபதியைக் கூற முடியாது. ஜெயலலிதா சொல்வதை செய்ய வேண்டிய நிலை தான் அவருக்கு ஏற்படும்.இதனால் இந்த நீதி விசாரணையை ஏற்கவே முடியாது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications