இந்தியா-பாக். கொடிகளுடன் வந்திறங்கிய முஷாரப் விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய - பாக் பேச்சவார்த்தைக்கு முஷாரப் தனி விமானத்தில் டெல்லி வந்திறங்கினார்.
விமானம் ஓடுபாதையில் வந்தபோது விமானத்தின் விமானி அறையிலிருந்து இருபுறமும் விமானிகள் இந்தியதேசிய கொடியையும், பாகிஸ்தான் கொடியையும் ஜன்னல் வழியே வெளியே ஆட்டினர்.
இக்காட்சியைக்கண்ட அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இது இரு நாடுகளுக் கிடையே ஏற்பட உள்ள நட்புறவின் முதல் படியாகக் கருதப்படுகிறது.
போயிங் 737 - 300 ரக விமானத்தில்,முஷாரபுடன் அவரது மனைவி ஷெபாவும் வந்துள்ளார்.
அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குலிமோஸின் காரில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
முன்னதாக மத்திய மந்திரி திக் விஜய் சிங் மற்றும் பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகள், அவர்களை வரவேற்றனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications