For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே பள்ளியில் படித்த முஷாரப், அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபும் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியும் கராச்சியில் ஒரே பள்ளியில்படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளும் பிரிந்தபோது முஷாரபின் குடும்பம் டெல்லியிருந்து பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தது. அதே போலஅத்வானியின் குடும்பம் கராச்சியிலிருந்து இந்தியாவுக்குள் வந்தது.

இந்தியாவுக்கு வரும் முன் அத்வானி கராச்சியில் உள்ள செயிண்ட் பாட்ரிக் பள்ளியில் படித்து வந்தார்.இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஷாரப் அதே பள்ளியில் தான் சேர்ந்து படித்தார்.

அத்வானியை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்த பர்வேஸ் முஷாரப் இதனை நினைவூட்டினார். இருவரும்நெடு நேரம் கைகுலுக்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அதே போல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தூதகராகப் பணியாற்றியஅப்துல் சத்தார் தான் இப்போது அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர். தூதராக இருந்தபோது மூத்தஅரசியல்வாதியாக இருந்த அத்வானியை பலமுறை சந்தித்துள்ளார் சத்தார்.

சனிக்கிழமை முஷாரபுடன் இந்தியா வந்துள்ள சத்தார் குடியரசுத் தலைவர் மாளிகையில் அத்வானியைக்கண்டவுடன் தனது இடத்திலிருந்து எழுந்து வந்த சத்தார், அவரை இறுக்கி அனைத்துக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X