ஆளை மாற்றி ஆபரேஷன் செய்த திண்டுக்கல் மருத்துவமனை
திண்டுக்கல்:
அரசு மருத்துவமனை என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கு நிலவும் துர்நாற்றம் மற்றும்அவ்வப்போது நடக்கும் தவறான சிகிச்சைகள் தான்.
அதாவது இடது காலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் சரியாக வலது காலில் செய்வது. பற்றாக்குறைக்கு இந்தியன் படத்தில் வருவது போல வாய்ச் சவடாலுடன் லஞ்சம் வேறு.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை இதில் நம்பர் 1 .
கடந்த ஆண்டு 3 கர்ப்பிணிகள் இங்கு தவறான அறுவைச் சிகிச்சையால் இறந்தார்கள். அடுத்து, மண்டைக்குள்விறகுத்துண்டை வைத்து ஒருவருக்குத் தைக்கப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 29ந் தேதி ஆபரேஷன் தியேட்டருக்குள் ஏற்பட்ட ஆள் மாறாட்டம்காரணமாக முகமது ஹசன் என்ற சிறுவனுக்கு சிறுநீரகத்துப் பதில் மலத்துளையிலும், சதீஷ் குமார் என்ற சிறுவனுக்குமலத்துளைக்குப் பதில் சிறுநீரகத்திலும் ஆபரேஷன் செய்யப் பட்டது.
திண்டுக்கல்வாசிகள் இதையறிந்து பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications