தற்கொலை ஏன்?: ரமே
சென்னை:
சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும் மாநகராட்சி காண்ட்ராக்டருமாக அண்ணா நகர்ரமேஷ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சொத்துக்கள் குறித்த முழு விவரமும் அறிய இவரைத் தான்அரசு முதலில் குறி வைத்தது. சென்னையில் காண்ட்ராக்டர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அண்ணாநகர் ரமேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் இப்போது போலீசார் கையில் சிக்கியுள்ளது.
அதில், என்னை மேலும் பல வழக்குகளில் போலீசார் கைது செய்வார்கள் என்று பயப்படுகிறேன். போலீஸ்கெடுபிடிக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.
போலீசின் சந்தேகம்:
பரபரப்பான இந்தக் கடிதம் பற்றி போலீசார் கூறுகையில், இது அவரே எழுதியதா அல்லது வேறு ஒருவரால் எழுதிவைக்கப்பட்டதா என்று ஆராய்ந்து வருகிறோம். இது அவரது கையெழுத்து தானா? அவராக எழுதியதா? அல்லதுயாராவது மிரட்டி இப்படி எழுத வைத்தார்களா? என்பது குறித்து ஆராயந்து வருகிறோம் என்றனர்.
அரசியல் ஆதாயத்திற்காக யாராவது போர்ஜரியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் கொடுத்து இந்தக்குடும்பத்தைக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications