அ.தி.மு.க. ராஜ்யசபை தலைவர் நாராயணன், பொருளாளர் எஸ்.எஸ்.சந்திரன்
சென்னை:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்களுக்கு தலைவராக பி.ஜி. நாராயணன்தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இதையடுத்து புதிய எம்.பிக்கள் தேர்வு சமீபத்தில் நடந்தது. காலியாக உள்ள 6 எம்.பி. பதவிகளில் 4 இடங்களுக்குஅ.தி.மு.க வேட்பாளர்களும், ஒரு இடத்தில் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிவேட்பாளரும், 1 இடத்திற்கு தி.மு.க. வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சையாக போட்டியிட்டவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், 6 பேரும் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பிக்களுக்கான கட்சி நிர்வாகப் பதவிகளை புதன்கிழமை அறிவித்தார்.
அதன்படி அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்களின் தலைவராக பி.ஜி.நாராயணனும், துணை தலைவராக திருமதிகோகுல இந்திராவும், கட்சி கொறடாவாக ஆர்.காமராஜும், செயலாளராக எம்.எஸ். நிறைகுளத்தனும்,பொருளாளராக எஸ்.எஸ். சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஞானதேசிகன்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.க, சார்பில் நடிகர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications