ஆடி அமாவாசை திருவிழா: கூட்ட நெரிசலில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோவிலில் ஆடி அமாவாசைத் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 3 பக்தர்கள் கொல்லப்பட்டனர்.
இங்குள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருடமும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் இங்கு பக்தர்கள்வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விழாவின் போது பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் இறந்து போனார்கள். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உடல்கள்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications