குரலால் உயிர் பெற்ற வசனங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவாஜி என்றதும் அவரது சிம்மக் குரலும், அந்தத் குரல் உச்சரித்த விதமும் தான் நினைவுக்கு வரும்.
"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது,
உனக்கேன் கொடுக்க வேண்டும் வட்டி "
- வீர பாண்டிய கட்டபொம்மன்.
"ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினாள்"
- பராசக்தி.
இது தவிர திருவிளையாடல், மனோகரா, உத்தம புத்திரன், ராஜராஜசோழன், சரஸ்வதி சபதம், பாசமலர் என அவர்சடித்த முக்கால் வாசிப் படங்கள், வசனங்களுக்குப் பெயர் போனவை.
ராஜாராணி என்ற படத்தில் கவிதை நடையில் அமைந்த மிக நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்தினார்சிவாஜி.
சிவாஜி பேசி, நடிக்கும் பாணியை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் மர்லின் பிராண்டோ, என்னைப் போலசிவாஜியால் நடிக்க முடியும். ஆனால், சிவாஜியைப் போல உயிர்ப்புடனும், உயிரோட்டத்துடனும் என்னால் நடிக்கமுடியாது என்று பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications