சுதாகரனுக்கு 3 நாள் நிபந்தனை ஜாமீன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு மனிதாபிமான அடிப்படையில் 3 நாள்நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியான சத்தியலட்சுமியை சுதாகரன் மணந்து கொண்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு சிவாஜி கணேசன் மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சுதாகரனைபரோலில் விடுமாறு கோரிக்கை விடுத்து சத்தியலட்சுமி தமிழக அரசுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தந்திஅனுப்பி இருந்தார். ஆனால் இரு தரப்பிலும் அது மறுக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் சுதாகரனை ஜாமீனில் விட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன், மனிதாபிமானஅடிப்படையில் 3 நிபந்தனை ஜாமீனில் விடுவதாக உத்தரவிட்டார்.
இதையடுத்து சுதாகரன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.