மேம்பால ஊழல் வழக்கு: இன்று கோர்ட்டில் ஆஜரானார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, தற்போதுஜாமீனில் இருக்கும் சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், திங்கள்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகிகையெழுத்திட்டார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலின், பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.ஒவ்வொரு திங்கள்கிழமையும் அவர் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்படி திங்கள்கிழமை காலை நீதிபதி அசோக்குமார் முன் ஆஜராகி ஸ்டாலின் கையெழுத்திட்டார். அவருடன்இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர்கள் கோ.சி. மணி, முன்னாள் தலைமைச்செயலாளர் கே.என் .நம்பியார் ஆகியோரும் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட்டனர்.












Click it and Unblock the Notifications