For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜி இறுதிச் சடங்கு: சுதாகரனுக்குப் பரோல் இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திங்கள்கிழமை நடைபெறும் நடிகர் சிவாஜி கணேசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான பரோல்சுதாகரனுக்குக் கிடைக்கவில்லை.

சிவாஜியின் பேத்தி சத்தியலட்சுமியைத் திருமணம் செய்த ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்,தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார். அவர் மீது 3 வழக்குகள் உள்ளன.

சனிக்கிழமை இரவு சிவாஜி இறந்ததையடுத்து, அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடையமனைவி சத்தியலட்சுமி தமிழக அரசுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தந்தி மேல் தந்தி அனுப்பினார்.

விசாரணைக் கைதியாக உள்ள சுதாகரன், நீதிமன்றம் மூலம் மட்டுமே பரோலில் வெளியே வர முடியும் என்று அரசுகூறிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. திங்கள்கிழமைகாலை 10.30 மணிக்கு மேல்தான் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற முடியும்.

இதனால் திங்கள்கிழமை காலை நடைபெறவிருக்கும் சிவாஜியின் இறுதிச் சடங்கில் சுதாகரன் கலந்து கொள்ளமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X