For Daily Alerts
Just In
மக்களுக்காகவே அரசு ஊழியர்கள்: ஜெ.
சென்னை:
அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெறும் கோரிக்கைகளைக் கூறுவதற்கு மட்டும் சங்கத்தைப்பயன்படுத்தாமல், ஏழை-எளிய மக்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
அரசு வருவாயில் 70 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், 24 சதவீதம் பென்ஷனுக்கும் போகிறது. எஞ்சிய6 சதவீதம் மட்டுமே வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்படிப்படியாக நிறைவேற்றப்படும்.
திமுக ஆட்சிக்காலத்தில் நிதி நிலைமை மோசமாக இருந்தது. அதை நாங்கள் சீர் செய்து வருகிறோம் என்றார்ஜெயலலிதா.
Comments
Story first published: Thursday, May 10, 2001, 5:30 [IST]