சென்னையில் திருட்டு வி.சி.டி. தொழிற்சாலை கண்டுபிடிப்பு
சென்னை:
சென்னை கொடுங்கையூர் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், வி.சி.டிக்கள் தயாரிக்கும் 2 ரகசியதொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து சென்னை வடபகுதி இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில் தனி போலீஸ் படைஅமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட இந்தப் போலீஸ் படையினர், கொடுங்கையூ-மகாகவி பாரதி நகரில்உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டுக்குள்ளேயே வி.சி.டிக்கள் தயாரிக்கப்படுது தெரிந்தது. இதையடுத்து தொழிற்சாலையைநடத்திவந்த இதயத்துல்லா என்பவரைக் கைது செய்தனர். அங்கிருந்த 4 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியில் விவேகாநந்தா நகரைச் சேர்ந்த பாலாஜி வீட்டிலும் ஒரு திருட்டு வி.சி.டி. தொழிற்சாலைகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாலாஜியையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.