பால் தாக்கரேயை சந்திக்க பெர்னாண்டஸ் மும்பை விரைந்தார்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் மீது கடும் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தையும் புறக்கணித்தசிவசேனைக் கட்சியின் தலைவர் பால் தாக்கரேயுடன் பேச்சு நடத்த தே.ஜ. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரானஜார்ஜ் பெர்னாண்டஸ் செவ்வாய்க்கிழமை மாலை மும்பை விரைந்தார்.
இதையடுத்து தனது கட்சியின் எம்.பி. தெரிவித்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என பால்தாக்கரே கூறினார்.தொடர்ந்து வாஜ்பாயை ஆதரிப்பதாகவும் கூறினார்.
ஆனாலும் வாஜ்பாய் தனது ராஜினாமாவில் உறுதியாக இருக்க அவரை சமாதானப்படுத்த புதன்கிழமை தேசியஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தது. நேற்று வாஜ்பாயை எதிர்க்கவில்லை என்று கூறிய தாக்கரே இந்தக்கூட்டத்துக்கு தனது பிரதிநிதியை அனுப்பவில்லை.
இதைத் தொடர்ந்து சிவசேனை கட்சியின் எம்.பியைக் கண்டித்தும் வாஜ்பாய் மீது முழு நம்பிக்கைத் தெரிவித்தும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாஜ்பாயை குறை கூறிய சஞ்சய் நிரூபம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பால் தாக்கரேயை வலியுறுத்துவது எனவும்முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தாக்கரே தனது எம்.பியை வெளியில் கண்டிப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவர் தான்எம்.பியைத் தூண்டிவிட்டு வாஜ்பாயைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
பால் தாக்கரேயின் உண்மையான நிலையை அறிந்து கொள்ளவும், குறை கூறிய சிவசேனை எம்.பி. மீதுநடவடிக்கை எடுக்கக் கோரியும் மும்பை விரைந்துள்ளார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.












Click it and Unblock the Notifications