கருணாநிதி கைது சம்பவம்: ஜெ.க்கு மத்திய அரசு மீண்டும் கடிதம்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மீண்டும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் அத்து மீறி நடந்து கொண்ட போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது.அந்த கமிஷன் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் துணைக் கமிஷனர்கள் ஜார்ஜ் மற்றும்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றுமத்திய அரசு கடந்த வாரம் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
இவர்கள் 3 பேருமே கைது சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக திமுகவினரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) மத்திய அரசிடம் இருந்து மற்றொரு கடிதம் வந்துள்ளது. அதில் கைதுசம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம்கேட்கப்பட்டுள்ளது.