For Daily Alerts
Just In
தாய்ப்பால் வாரம் இன்று ஆரம்பம்
சென்னை:
புதன்கிழமை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
தாய்ப்பாலுக்கு ஈடு இணை கிடையாது. உலகத் தாய்ப்பால் ஊட்டும் வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தின்சார்பில் இந்த 7 நாட்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஓரங்க நாடகம், துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலமாக நவீன தகவல் தொடர்பு யுகத்தில்தாய்ப்பாலின் நிலை குறித்து தாய்மார்களுக்கும், மகளிருக்கும் விளக்கப்படும்.
இந்த நிகழ்ச்சிகளில் தாய்ப்பால்தான் குழந்தைக்கு சிறந்த உணவு என்றும், இதற்கு இணை எதுவும் கிடையாதுஎன்பது குறித்தும் விளக்கப்படும் என்றார் கோபாலகிருஷ்ணன்.
Comments
Story first published: Sunday, June 24, 2001, 5:30 [IST]