வாஜ்பாய் மீது கூட்டணித் தலைவர்கள் முழு நம்பிக்கை: ஆனால், சிவசேனை....??
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் பதவி விலகக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்கூறியுள்ளன.
ஆனால், இந்தக் கூட்டத்தை சிவசேனைக் கட்சி புறக்கணித்துவிட்டது. யூ.டி.ஐ. ஊழலில்பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது சிவசேனை தான்என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனை கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்ஜய் நிருபம் யு.டி.ஐயின் யு.எஸ் -64பங்குகள் விவகாரத்தில் பிரதமர் அலுவகத்தில் உள்ள அதிகாரியான என்.கே.சிங்குக்கும் தொடர்பு இருக்கிறது என்று ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.
இதனால் மனமுடைந்த பிரதமர் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாகபாரதிய ஜனதா கூட்டத்தில் அறிவித்தார். கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியே தன்மீது குற்றம் சுமத்தியதால் பிரதமர் மனமுடைந்து இந்த முடிவை எடுத்தார்.
இதை அடுத்து பிரதமரின் முடிவு குறித்து விவாதிக்க புதன்கிழமை காலை பிரதமர்இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் கூடியது. இந்த கூட்டம் 1 மணிநேரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வாஜ்பாய் தலைமையில் முழு நம்பிக்கை இருப்பதாக கூட்டணிகட்சியினர் கருத்துத் தெரிவித்தனர். தனது பதவி விலகும் எண்ணத்தை வாஜ்பாய்கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர்ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், வாஜ்பாய்தான் ஒரே தலைவர். வேறு தலைவர்என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இந்த கமிட்டியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலி மாறன்,தே.ஜ.க ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அஜீத் சேத்தி, பா.ஜ.கவின் மூத்ததலைவர் சிக்கந்தர்பக்த் ஆகியோர் கொண்ட 4 பேர் இடம் பெற்றிருப்பார்கள் என்றார்..
இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் யாரும் இடம் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.