For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுக்கு பொது மன்னிப்பா? - மறுக்கிறார் தேவாரம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் முன்னாள்டி.ஜி.பியும், கூட்டு அதிரடிப்படையின் தலைவருமான வால்டர் தேவாரம்.

வியாழக்கிழமை கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவனுக்குப் பொது மன்னிப்புஅளிக்கும்படி யார் கோரினாலும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.

ஆனால், வீரப்பன் சரணடைவதற்குத் தயார் என்றால், அவனுடைய உயிருக்கு முழுமையான பாதுகாப்புஅளிக்கப்படும் என்பதை மட்டும் நாங்கள் உறுதியாகக் கூறமுடியும்.

வீரப்பனைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசுஅறிவித்துள்ளது.

வீரப்பன் நடமாடுவதாகக் கூறப்படும் காட்டுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தற்போதுஅதிரடிப்படையினருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அளித்து வருகிறார்கள்.

அதிரடிப்படையினர் தங்களுடைய "வீரப்பன் வேட்டையை ஆரம்பித்து 45 நாட்களாகிவிட்டன. இதுவரை மனிதஉரிமை மீறல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றார் தேவாரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X