டெல்லி சென்றார் ஜெயலலிதா
சென்னை:
திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்குப்புறப்பட்டார்.
அங்கு தமிழக திட்ட ஒதுக்கீடு குறித்து மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த் மற்றும் பிரதமர்ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
முதல்வராகப் பதவியேற்றவுடன் டெல்லி சென்ற ஜெயலலிதா தற்போது இரண்டாவது முறையாக டெல்லிசெல்கிறார். ஆனால் இப்போது சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது.
கருணாநிதி கைது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடுமையான உரசல்கள் ஏற்பட்டுள்ளநிலையில் டெல்லிக்கு செல்கிறார் முதல்வர்.
ஜெயலலிதாவின் டெல்லி பயணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்கூட, திட்ட ஒதுக்கீடு தொடர்பாக திட்டக்கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்துடன் பேசுவதற்காகவே டெல்லி செல்வதாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவைக் கூட்டுவது தொடர்பாக பந்த் மற்றும் பிரதமர் வாஜ்பாய், நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை முதல்வர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, முதல்வரின் டெல்லி பயணம் தொடர்பாக ஜெயலலிதா தலைமையில் திங்கள்கிழமை மாலைஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.