பெண் சிசுக் கொலையைத் தடுக்க கோரிக்கை
டெல்லி:
பெண் சிசுக்கொலையைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் டெல்லியில் நடந்த ஒருகருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய டி.எம்.சி யின் தலைவர் சவுத்ரி கூறியதாவது:
குழந்தை பிறக்கு முன்பே அதன் பாலினம் என்ன என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை மருத்துவநெறிமுறைகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதன் மூலம், பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு, கருக்கலைப்புகள் அதிகரித்துவருகின்றன. இது, தற்போது ஒரு வியாபாரமாகவே மாறிவிட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1901 ல், 1000 ஆண்களுக்கு , 972 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்தது.தற்போது, 2001 -ல் 1000 ஆண்களுக்கு 933 என்ற விகிதத்தில் குறைவாகவுள்ளது.
இந்த விகிதாச்சார மாறுபாடு டெல்லி, ஹரியானா, குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியமாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. அதாவது இந்த மாநிலங்களில்தான் பெண்கள் குறைவான விகிதத்தில்உள்ளனர் என்றார் சவுத்ரி.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோகன்ராவ் கூறும்போது, குடும்பத்திற்கு 2 குழந்தைகள்போதுமானது என்ற கொள்கையும் இதற்கு ஒரு காரணம். இதனால் பெண் குழந்தைகள் கருவிலேயேகண்டறியப்பட்டு கலைக்கப்படுகின்றன என்றார்.
சுப்ரீம் கோர்ட் வக்கீல் முரளிதர் கூறியதாவது:
கருவில் வளரும் குழந்தை என்ன என்று பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து 1994 -ம் ஆண்டு ஒரு சட்டம்இயற்றப்பட்டது. அது 1996 -ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், பதிவு செய்யப்படாத சோதனை மையங்களும்,மருத்துவ மணைகளும் இயக்கப்டுவது குற்றம் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கருவில் வளரும் குழந்தைக்கு ஏதாவத ஆபத்து ஏற்படலாம் என்று கருதினாலோ, பாலின நோய்கள்ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தாலோ இந்த சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்றுசட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இது மாதிரியான குற்றங்களைத் தடுக்கமுடியும் என்றார்முரளிதர்.
பத்திரிக்கையாளர் அனிதா ஆனந்த், இதுபற்றிய ஒரு சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் கருங்தரங்கில் கலந்துகொண்ட அனைவரும், இதுவரை சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்புக்கு உதவியமருத்துவர்கள் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு உடந்தையாக இருக்கும் மருத்துவர்களும்மண்டிக்கப்பட வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications