சிவாஜி கணேசன் பெயரில் கல்லூரி
கன்னியாகுமரி:
நடிகர் சங்கத்தின் உதவியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரி அல்லது கலைக் கல்லூரிதுவக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நடிகரும், சிவாஜியின் மகனுமான பிரபு கூறியுள்ளார்.
திருவள்ளுவர் கால் பதித்த இடத்தில் எனது தந்தையின் அஸ்தியை கரைத்துள்ளோம். தமிழ் சினிமாவில் தமிழை,தமிழ் வசனங்களை தெளிவாக உச்சரித்து அழியாப் புகழ் பெற்ற எனது தந்தைக்கு மரியாதை செய்வதற்காகவேஅவ்வாறு செய்தோம்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் முக்கியமான மாவட்டம், முக்கடலும் சங்கமிக்கும் இடம், மேலும்எனது தந்தைக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் இங்குதான். எனவே இங்கே அஸ்தியைக் கரைக்க முடிவுசெய்தோம். இன்னொரு அஸ்திக் கலசத்தை எனது சித்தப்பா மகன் கிரி, ராமேஸ்வரம் கடலில் கரைக்கிறார்.
நடிகர் திலகத்திற்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதைப்பரிசீலிப்பதாக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நடிகர் சங்கத்தின் உதவியுடன் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரி அல்லது கலைக் கல்லூரி துவங்குவதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார் பிரபு.












Click it and Unblock the Notifications