நின்றது கிருஷ்ணா நீர்.. சென்னையில் மீண்டும் கடும் குடிநீர் பஞ்சம்
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை நகருக்குத் திறந்து விடப்பட்டு வந்த கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து கொஞ்சம் குறைந்திருந்த சென்னை குடிநீர் பஞ்சம் மீண்டும் கடும் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
கண்டலேறுவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைய ஜூலை 13ம் தேதியானது.அதன் பிறகும் குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந் நிலையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் சென்னைக்கு திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு விட்டது.
கிருஷ்ணா நீர் சுத்தமாக நின்று விட்டதால் சென்னையில் மீண்டும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அச்சம் மக்கள்மனதில் எழுந்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டு வர முன்பு யோசனைதெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது செலவு அதிகமாகும் என்பதால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வேறு மாற்றுத் திட்டங்கள் குறித்து தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications